Friday, April 10, 2009

தேர்தல் அதிசயங்கள்!

அதிசயங்கள் அதிசயங்கள்
இவைகள்
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
நடக்கும் அதிசயங்கள்!
 
இரவிலும் 'சூரியன்' உதிக்கும்
'இலை'களும் பல வண்ணங்களில் தளிர்க்கும்!
 
கொட்டையில்லா 'மாம்பழம்' கிடைக்கும்
சாட்டையில்லாமல் 'பம்பரம்' சுற்றும்!
 
பொட்டல் தரையிலும் 'தாமரை' மலரும்!
கொட்டாமலே 'முரசு' ஒலி எழுப்பும்!
 
கர்ணணின் 'கை'கள் வீட்டிற்குள் வந்துபோகும்
கதவிடுக்கிலும் காசு முளைக்கும்!
 
ஆள்காட்டி விரலில் மை வைக்கும்வரை
ஆளில்லா வீட்டிற்குள்ளும்
ஐநூறு ஆயிரம் கிடக்கும்!
 
அதிசயங்கள் அதிசயங்கள்
இவைகள்
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
நடக்கும் அதிசயங்கள்!
 
 
உழவன்
 
இக்கவிதை யூத்ஃபுல் விகடனில் 01.04.2009 அன்று இடம்பெற்றுள்ளது.

3 comments:

cheena (சீனா) said...

அருமையான உல்க அதிசயங்கள் - இந்தியாவில் மட்டும் நடக்கும் அதிசயங்கள்

நல்ல நகைச்சுவை

நல்வாழ்த்துகள்

priyamudanprabu said...

அதிசயங்கள் அதிசயங்கள்
இவைகள்
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
நடக்கும் அதிசயங்கள்!
///


இல்லைங்க அதிசியம் இல்லை இது எங்களுக்கு பழகி போச்சு

"உழவன்" "Uzhavan" said...

வாங்க சீனா & பிரபு..
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.