Monday, January 5, 2009

பண்டிகைச் சோறு

நான்கு தெருவாவது
சென்றால்தான்
ஒரு வேளை சோறு
 
இன்று
புத்தாண்டாம்
முதல் தெருவிலேயே
என் சோற்றுப்பாத்திரம்
நிரம்பி வழிகிறது
 
யாருக்குத் தெரியும்
நேற்று நான்
பட்டினி கிடந்தது !
 
பசிக்கு சோறுபோடக் கூட
பண்டிகை நாட்கள் வேண்டுமோ?
 
 
உழவன்

0 comments: