Monday, June 2, 2008

அவளொரு நெய்தல்!

நுரைத்திருக்கும் அலையாய்
சிரிப்பிருக்கும்
இதழ்!
 
கரைதொடும் அலைகளின்
சிணுங்கள்களாய்
சிரிப்பு!
 
மணல்வெளியில் சங்குகளாய்
காரித்துப்பிய
எச்சில்கள்!
 
காயப்படாமல் கடல்கிழிக்கும்
கலங்களாய்
கண்கள்!
 
முத்து சுமக்கும் சிப்பிகளாய்
தோடு சுமக்கும்
காதுகள்!
 
எனைமறக்க நான் தலைசாயும்
மணல்வெளியாய்
மடி!
 
ஒருநாள் பிரிவிலேயே
தீவுகளாய் மேனியில்
பசலைகள்!
 
உப்பளத்தில் சிதறிய
கல் உப்புக்களாய்
வியர்வைத் துளிகள்!
 
இளஞ்சூரியனால்
மினுங்கும் மணல்வெளியாய்
மேனி!
 
கன்னமெனும் சின்னக்கடலில்
சுழலாய் ஒரு
குழி!
 
அளவில் வேறுபடும்
ஐய்யிரு மீன்களாய்
விரல்கள்!
 
வாலாட்டும் வாளையாய்
வளைந்து நெளியும்
பின்னல்!
 
நீலக்கடல் வியக்கும் குமரியே ...
நீயே ஒரு நெய்தல் தானே!
 

1 comments:

Anonymous said...

நீலக்கடல் வியக்கும் குமரியே ...
நீயே ஒரு நெய்தல் தானே!

அழகான கவிதை