Monday, May 12, 2008

'அன்னையும் சிசுவும்' கலை கண்காட்சி நடிகர் பார்த்திபன் திறப்பு

அன்னையர் தினத்தை முன்னிட்டு சென்னை செனடாப் சாலையில் உள்ள சரளாஸ் ஆர்ட் சென்டரில் கலைக்கண்காட்சியை நடிகர் பார்த்திபன் திறந்து வைத்தார்.


'அன்னையும் சிசுவும்' என்ற தலைப்பில் ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் ஏ.பி.ஸ்ரீதர், சி.ரவிக்குமார், ஜே.ஜெய் ப்ரதீப் ஆகிய புகைப்பட நிபுணர்களின் படைப்புகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு்ள்ளன.துவக்கவிழாவுக்கு நடிகர் பார்த்திபன் தலைமை தாங்கினார்.

அப்போது, அங்கிருந்த பாரம்பரிய குத்துவிளக்கு ஓவியத்தில் இருந்த திரி மீது சிவப்பு மையில் பார்த்திபன் வரைய தீபம் சுடர்விட்டு ஏறிவது போல இருந்தது. பார்த்திபனுடன் வந்திருந்த மகனும் மகளும் தங்கள் பங்குக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தை பூசி தீபம் கொழுந்து விட்டு எரிவது போல வரைந்தனர்.

இந்த வித்தியாசமான துவக்கவிழாவை கண்காட்சிக்கு வந்தவர்கள் பெரிதும் ரசித்தனர். இந்த கண்காட்சி வரும் மே 20ம் தேதி வரை நடக்கிறது.

0 comments: