Saturday, May 10, 2008

எங்கே என் அம்மா ? - அன்னையர் தின சிறப்புக் கவிதை

எங்கே என் அம்மா
எங்கே என் அம்மா?
தாலாட்டுக் கேட்டுத்
தூங்கியதுமில்லை!
தாயின் குரல் கேட்டு
எழுந்ததுமில்லை!
என் மழலைமொழி
ரசிக்க
இங்கு யாருமில்லை
என்னை மடியில் வைத்துக்
கொஞ்ச
ஒருவரும் இல்லை!
இடுப்பில் சுமந்து
எவரும் எனக்கு
ஊட்டியதுமில்லை
கடைவாய் துடைத்து
யாரும் என்
கன்னம் கிள்ளியதில்லை!
பிடித்து நடக்க
எனக்கொரு
ஆள்காட்டி விரல்
கிடைத்ததில்லை!
சிலேட்டில் எழுதிய
என் எழுத்துக்களை
யாரும் வியந்ததுமில்லை!
ஒருமுறையேனும்
பால் கொடுத்தாளோ
தெரியவில்லை!
என்னை ஏன்
அநாதையாக்கினாளோ
புரியவில்லை!
தேடுகிறேன் நான்
எங்கே என் அம்மா
எங்கே என் அம்மா?
உழவன்

0 comments: