Saturday, April 19, 2008

நாங்களும் பாரதிதான்

ஆடையைக்
கண்டுபிடித்தவன்
கண்ணத்தில்
ஓங்கி ஒரு
அறை
விடவேண்டும் !

உடல் மறைக்க
எப்போது நினைத்தானோ
அன்றுதான்
நான்கு சுவர்
தேவைப்பட்டிருக்கும் !

எவன் செய்த தவறோ ..
இன்று அலைகிறோம்
தெருவெல்லாம்
வாடகை வீட்டுக்குக் கூட !

ஒரு வகையில்
நாங்களும்
காணி நிலம் தேடும்
பாரதிதான் !

உழவன்
blocked::mailto:tamil.uzhavan@gmail.com
http://tamizhodu.blogspot.com/
http://tamiluzhavan.blogspot.com/

0 comments: