Monday, April 21, 2008

எய்ட்ஸ் நோயாளியை விட்டு சிறுமிகளை கற்பழிக்க வைத்த பெண் கைது

விருதுநகர்: தேர்தல் முன் விரோதம் தொடர்பாக, எய்ட்ஸ் பாதித்த தனது அண்ணனை விட்டு இரு சிறுமிகளை கற்பழிக்க வைத்த கொடூரப் பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அந்த எய்ட்ஸ் நோயாளியும் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவர் சமீபத்தில் உள்ளாட்சித் தேரத்லில் போட்டியிட்டார். அதில் தோல்வி அடைந்தார்.இதையடுத்து வெற்றி பெற்ற பெண்ணின் மீது கோபம் கொண்டார். அவரைப் பழிவாங்க தீர்மானித்தார்.
இவரது அண்ணன் அய்யப்பன். இவர் ஒரு எய்ட்ஸ் நோயாளி. இதனால் இவரது மனைவி சின்னம்மாள் தற்கொலை செய்து கொண்டார்.தனது அண்ணனை வைத்து பழிவாங்கும் படலத்தைத் தொடங்கினார் வேளாங்கண்ணி.
தேர்தலில் வெற்றி பெற்ற பெண்மணிக்கு, 12 வயதில் ஒரு மகள் உள்ளார். அவரை தனது வீட்டுக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்தார் வேளாங்கண்ணி. பின்னர் தனது அண்ணனை விட்டு கற்பழிக்க விட்டார்.இதேபோல அய்யப்பன், தனக்கு மகள் முறை வரும் 15 வயது சிறுமியையும் கொடூரமாக கற்பழித்தார்.
இந்த நிலையில் இரு சிறுமிகளுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அடிக்கடி காய்ச்சல், சோர்வு, உடலில் புண்கள் ஏற்படுதல், மற்றும் திடீர் உடல் நலக்குறைவு போன்றவை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து இரு சிறுமிகளுக்கும் அரசு மருத்துவ மனையில் ரத்த பரிதோதனை செய்தபோது, இருவருக்கும் எச்ஐவி தாக்கியிருந்தது தெரிய வந்தது.இதையடுத்து இரு சிறுமிகளின் பெற்றோர்களுக்கு ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில் வேளாங்கண்ணியின் அக்கிரமச் செயல் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். - நன்றி - தேட்ஸ் தமிழ்

0 comments: