Saturday, April 5, 2008

உபசாரி

தாகம் தீர்க்கும்

நீரும்

இவளும்

ஒரே சாதி

 

செய்யும் தொழிலே

தெய்வம்

தொழில் செய்யும்

இடமே கோவில்

 

இங்கு தீபம்

எரிகிறதோ இல்லையோ!

தினம்தினம் தீபமாய்

எரிபவள் இவள் மட்டும் தான்!!

 

தன்னை

எரித்து

தண்ணீராய்

வாழ்பவளே!!

 

உனக்கு

மட்டும் ஏன்

இத்தனை

நாமங்கள்?

 

வேசி,

விபச்சாரி,

நடத்தைக் கெட்டவள்,

ஒழுக்கமற்றவள்!

 

உன்னைப் 

பரைசாற்றும் - இவன்

ஒழுக்கம்

எங்கே?

 

வரதட்சனை

கேட்கும்

இவனும் ஒரு

வேசி தான்!!!

 

சிசுவதை

செய்கிறான்

சிசுவைக்கூட

தவறாய்ப்  பார்க்கிறான்

 

இவன்

காமப்பசிக்கு

வடிகால் தரும் நீ

ஒழுக்கமற்றவளா?

 

தன் உழைப்பையும் அறிவையும்

வெளிநாட்டவருக்கு தானே

விலைப்பேசும்

இவனும் உன்னைப் போன்றவன் தான்!!!

 

மன்னிக்கவும்!

இவனை விட

நீ மேன்மையானவள் - ஒரு

மருந்தாக நீயிருப்பதால்

 

உன்னை

வணங்கும் அளவிற்கு

உன்னை நான்

உயர்த்தவில்லை!!!

 

தசை நரம்பு

எலும்பு இவைகளால்

பின்னப்பட்ட ஒரு உயரிய

மனிதனாய் பார்க்கிறேன்!!!

 

வெளிப்படையாய்

இருக்கும் உன்னை

ஒழுக்கமற்றவளாய் கூற - என்

நா கூசுகிறது

 

உன்னையும்

மதிக்கிறேன் - ஒரு

பெண்ணாய்!

உபசாரியாய்!!!

 

தோழமையுடன்..
ராஜேஷ்குமார்

0 comments: