Tuesday, April 22, 2008

லேட்டஸ்ட் 'மந்திரா பேடி' லேகா!


ஜில் நடிகை லேகா வாஷிங்டன் கிரிக்கெட் வர்ணனையாளராக மாறியுள்ளார்.முன்னாள் விஜே ஆன லேகா, சிம்புவின் கெட்டவன் படத்தில் நடிப்பதாக இருந்தது. சில காட்சிகளையும் எடுத்து முடித்த பின்னர் திருப்தி வராததால் அவருக்கு கல்தா கொடுத்து விட்டார் சிம்பு.தற்போது ஜெயம்கொண்டான் படத்தில் வினய்யுடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார் லேகா.

இந்த நிலையில் மந்திரா பேடி வரிசையில், அழகிய கிரிக்கெட் வர்ணனையாளராக மாறியுள்ளார் லேகா.

ஐபிஎல் போட்டிகளுக்கான கிரிக்கெட் வர்ணனையாளர் வரிசையில் லேகாவும் இணைந்துள்ளார். பெங்களூரில் நடந்த முதல் போட்டியிலிருந்து இந்தப் பணியை அவர் தொடங்கியுள்ளார்.

ரமீஸ் ராஜா, அஜய் ஜடேஜா, அருண்லால், சிவராமகிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து லேகாவும் அழகாக வர்ணனையில் ஈடுபட்டுள்ளார்.ஐபிஎல் தொடர் முழுவதும் வர்ணனையாளராக செயல்படப் போகிறாராம் லேகா.

லேகாவுடன், மந்திரா பேடியும் கமென்ட்ரி கொடுப்பது டபுள் போனஸாக இருக்கிறது.அன்றைய போட்டிகளின் முக்கிய நிகழ்வுள், பேட்டிகள், அடுத்து வரும் போட்டிகள் குறித்த விவரங்களை அழகாக எடுத்துரைக்கிறார் லேகா.குட் ஷாட்!

0 comments: