Wednesday, March 19, 2008

பிதாகரஸ் தியரம் (Pythagoras Theorem)

இன்று நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் தியரம் (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.

ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே.
- போதையனார்
இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.
போதையனார் தியரத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் (Square root) இல்லாமலேயே, நம்மால் இக்கணிதமுறையை பயன்படுத்த முடியும்.

4 comments:

Vino said...

Your post is interesting.. Guess I need to work on my language fundamentals still :)


I jus dropped in your blog accidently by looking at this blog title. I have scored 94 out of 100. Jus didn't attach the paper where i wrote this theorem and proving method :) then I cried for 10 mins came out exam center :)

Maalolan said...

marvellous :)

அப்துல் ரஹ்மான்.ஜ said...

நண்பரே,

தாங்கள் குறிப்பிட்டது பிழையானது போல் தெரிகிறது. கொஞ்சம் விளக்குங்களேன். ஒருவேளை நான் தவறிழைக்கிறேனா?

if a=8, b=2 then

by pitho c=root of 64+4 = 8.246

by tamil kavi c=(8 - 8/8)+ 2/2= 7+1= 8

பிழை எங்கு என தயவு செய்து விளக்குங்களேன்.

அப்துல் ரஹ்மான்.ஜ said...

நண்பரே,

தாங்கள் குறிப்பிட்டது பிழையானது போல் தெரிகிறது. கொஞ்சம் விளக்குங்களேன். ஒருவேளை நான் தவறிழைக்கிறேனா?

if a=8, b=2 then

by pitho c=root of 64+4 = 8.246

by tamil kavi c=(8 - 8/8)+ 2/2= 7+1= 8

பிழை எங்கு என தயவு செய்து விளக்குங்களேன்.