Saturday, March 15, 2008

நாங்களும் பாரதிதான் !

ஆடையைக்
கண்டுபிடித்தவன்
கண்ணத்தில்
ஓங்கி ஒரு
அறை
விடவேண்டும் !
 
உடல் மறைக்க
எப்போது நினைத்தானோ
அன்றுதான்
நான்கு சுவர்
தேவைப்பட்டிருக்கும் !
 
எவன் செய்த தவறோ ..
இன்று அலைகிறோம்
தெருவெல்லாம்
வாடகை வீட்டுக்குக் கூட !
 
ஒரு வகையில்
நாங்களும்
காணி நிலம் கேட்கும்
பாரதிதான் !
 
 
உழவன்
http://tamizhodu.blogspot.com

0 comments: