Saturday, February 14, 2009

உழவன் சொத்து

எப்போதாவது
கார்மேகம்
காரித்துப்பும்
கரிசல்காடு
 
கலப்பை இழுத்த
களைப்பில்
கண்ணசரும்
காளை மாடு
 
ஒரு முடி
சோளத்தட்டையில்
ஒட்டுப் போட்ட
கூரை வீடு !
 
எருக்கள் சிதறி
ஏரோட்டி
எங்கள் பிழைப்பு
நகர்கிறது
அரை வயிரோடு
 
சொத்து மதிப்பில்
குறைந்திருந்தாலும்
உலகிற்கே
சோறு போடும் பாக்கியம்
எங்களுக்கு மட்டுமே !
 
 

1 comments:

தமிழ் said...

உண்மை

தங்களின் வரிகளும் அழகு மிளிர்கின்றது