Monday, May 26, 2008

ஜெயகாந்தன் வெளியிடும் 'வார்த்தை'

வார்த்தை இதழை,எழுத்தாளர் ஜெயகாந்தன் வருகிற 6ம் தேதி வெளியிடுகிறார். அதே விழாவில் நான்கு புதிய நூல்களும் வெளியிடப்படவுள்ளன.


ஏப்ரல் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தி.நகர். தக்கர்பாபா வித்யாலயாவில் இந்த விழா நடைபெறுகிறது.பி.கே.சிவக்குமார் வரவேற்புரை நிகழ்த்துகிறார். விழாவில் அரவக்கோன் எழுதிய இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள் புத்தகத்தை இரா.முருகன் வெளியிட, அதை ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக் கொள்கிறார்.

பாவண்ணன் எழுதிய துங்கபத்திரை நூலை, பாலசுப்ரமணியன் வெளியிட, அதைப் பெற்றுக் கொள்கிறார் மணா.வெங்கட் சாமிநாதன் எழுதிய தமிழகக் கலைகளின் இன்றைய முகங்கள் என்ற நூலை, கே.எஸ்.சுப்ரமணியன் வெளியிட, சுகா (சுரேஷ் கண்ணன்) பெற்றுக் கொள்கிறார்.

ந.முருகானந்தம் தொகுத்த அமெரிக்காவில் ஜெயகாந்தன் நூலை, நாஞ்சில் நாடன் வெளியிட, தொகுப்பாசிரியரின் தாயார் ஞானாம்பாள் நடராஜன் பெற்றுக் கொள்கிறார்.வார்த்தை மாத இதழை ஜெயகாந்தன் வெளியிட, பி.ச.குப்புசாமி பெற்றுக் கொள்கிறார்.ஹரன் பிரசன்னா நன்றியுரை நவிழ்கிறார்.

0 comments: