Wednesday, May 14, 2008

அன்னையே மன்னித்து விடு ! - அன்னையர் தின சிறப்புக் கவிதை

அன்னையே
என் கால்களை
மன்னித்து விடு !

கூட்டத்தில் நடந்தால்கூட
யார் மேலும்
பட்டுவிடக்கூடாதென
எட்டு மேல் எட்டு வைத்து
நடக்கும் கால்களே...

உன்னால்
கருவறையை மட்டும்
எப்படி
உதைக்க முடிந்தது?

கருவறை உதைத்த
கால்களைக்
கையில் தூக்கிக்
கொஞ்சியவளே...
என் கால்களை
மன்னித்து விடு !

உழவன்
tamil.uzhavan@gmail.com
http://tamiluzhavan.blogspot.com
http://tamizhodu.blogspot.com

0 comments: