Friday, April 25, 2008

தாய்மார்கள் பால் சுரப்பதை நிறுத்தவேண்டுமா?

மல்லிகை மருத்துவம்

தாய்மார்கள் பால் சுரப்பதை நிறுத்த முடியாமல், ஒரு குறிப்பிட்ட வயது கடந்தும், கைக்குழந்தைக்கு பால் கொடுப்பார்கள். இதுபோன்ற பிரச்சனையுடையவர்கள், மல்லிகைப் பூக்களை மார்பகங்களில் குறைந்தது 3 நாட்கள் கட்டிக்கொண்டு வந்தால், பால் சுரப்பு நின்றுவிடும் என்று சொல்லுவார்கள்.

மனதை மயக்கும் நறுமணம் மட்டுமல்ல; பல மருத்துவ குணங்களும் கொண்டதுதான் மல்லிகை.

சில மல்லிகைப் பூக்களைக் கசக்கி, இரண்டு சொட்டுகள் கண்ணில் விட்டு வந்தால், கண் பூக்களே மாறத்தொடங்குமாம்.

உடம்பில் எதேனும் கட்டிகள் வந்தால், மல்லிகைப் பூவை அரைத்து பற்றுப் போடுங்கள். கட்டி கரைந்து விடுமாம்.

பொதுவாக பெண்களூக்கு அடிக்கடி தலைவலி வருவதுண்டு. மல்லிகையை தலையில் சூடிக்கொள்ளூம் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால், தலைவலி வரும் வாய்ப்பு மிகக் குறைவு. தலையணையடியில் மல்லிகையைப் பரப்பி படுத்தாலும், தலைவலி குணமாகும்.

மல்லிகையைக் கொண்டு எடுக்கப்படும் தைலத்தைத் தலையில் தேய்த்துக் குளித்தால், உடம்பின் உஷ்ணம் குறைந்து குளிர்ச்சியடையும்.

மல்லிகைப்பூ எண்ணையைத் தொடர்ந்து தேய்த்துவரின், கண் எரிச்சல் நீங்குமாம்.

- படித்ததும், பாட்டி சொன்னதும்

2 comments:

mohamedali jinnah said...

தாய்ப் பால் கொடுப்பது நல்லதுதான் நிறுத்தாமல் இருப்பது நல்லது .

mohamedali jinnah said...

அற்புத பானம் – தாய் பால்
மேலும் பிரிஸ்டல் பல்கலைகழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தாய்பாலின் நீண்ட கால நன்மையின் காரணமாக அவை இரத்த அழுத்தம் கட்டுப்படுத்துவதுடன் இதயம் சம்பந்தமான பாதிப்புகளை குறைக்கிறது. ஆய்வு குழுவின் அறிக்கை தாய்பாலின் பாதுகாக்கும் தன்மை அது கொண்டுள்ள சத்திலிருந்து வருவதாக கூறுகிறது. தாய் பால் கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் வருவது குறைவு என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது. தாய் பாலில்லோன்ங் செயின் பொலிஅன்செடுரேடட்பெட்டி அசிட்கள் காணப்படுவதால் – இவை நரம்புகள் இறுக்கமடையாமல் காப்பாற்றுகிறது – அதை போன்று தாய் பால் ஊட்டப்பட்ட குழந்தைகள் சோடியத்தை குறைவாக பெற்றுகொள்வதால் – இவை இரத்தம் அழுத்தம் ஏற்பட காரணமாக குறைக்கப்படுகிறது. அதன் காரணமாக அவை நிறை அதிகரிக்கப்பதால் தாய்பால் இதயத்திற்கு பயனளிக்கிறது
http://seasonsnidur.blogspot.com/2010/02/blog-post_8414.html