Wednesday, April 16, 2008

காதல் என்பது யாதெனில்...

எனக்கு பிடித்தவைகளே
உனக்கு பிடிக்கவேண்டும்
என்பல்ல காதல் . . .
உனக்கு பிடிக்காதவைகள்
எனக்கு பிடித்திருந்தும்
என்னை பிடிக்கும் என்பாயே
அதுவே காதல் !

உன்னை பற்றி நானும்
என்னை பற்றி நீயும்
தெரிந்து கொள்வதல்ல
காதல் . . .
நம்மைப் பற்றி நமக்கே
தெரியாதவைகளை
தெரியவைப்தே காதல் !

எல்லைகளை மீறுவதல்ல
காதல் . . .
நமக்குள் எல்லையே இல்லாமல்
இருப்பதே காதல் !

கற்பு நெறிக்கு உட்பட்டதல்ல
காதல் . . .
கற்புக்கு நெறிமுறைகளை
வகுத்ததே காதல் !

நட்பை விட உயர்ந்ததா தாழ்ந்ததா
என்பதல்ல காதல் . . .
நட்பை தன்னை விட உயர்ந்த
இடத்தில் வைத்து பெருமைப்படுத்துவதே
காதல் !

மொழிகளால் உணர்ந்து
கொள்ளக்கூடியதல்ல காதல் . . .
உணர்வுகளின் மொழியே
காதல் !

காதலை ரசிப்பது
மீனாள்

0 comments: