Friday, December 5, 2008

ஏனோ?

பத்து ரூபாய்

தோசைக்கு
முப்பதும்,

பதினைந்து ரூபாய்
பழச்சாறுக்கு
நாற்பதும் கொடுத்ததோடு

பகட்டுக்காக
டிப்ஸ் வேறு கொடுத்துவிட்டு,

வாசல்முன் வந்து நிற்கும்
காய்கறிகாரனிடமும்
அறுந்துபோன செருப்பைத்
தைத்துக் கொடுப்பவனிடமும்

இரண்டு ரூபாயாவது
பேரம் பேசாவிட்டால்
மனம் அடங்காது
போவது ஏனோ?