Monday, August 4, 2008

நட்புக்கு விலையேது

தொலைபேசியில் அழைத்த,
அழைக்க மறந்துபோன
அத்தனை நண்பர்களும்
என் திருமணத்தில்
ஒருபக்கம்!
 
வெற்றிலை பாக்கு
தாம்பூலமாய்
வீடுவரை சென்றழைத்தும்
முதல் பத்திரிக்கை
யாருக்கு
வைத்திருக்கவேண்டுமென்ற
சண்டையில்
என் சொந்தங்கள்
இன்னொரு பக்கம்!
 
சொந்த பந்தமெல்லாம்
நான்கு விரல்களாய்...
நட்பு மட்டுமே
பெருவிரலாய்
உணர்ந்தேன் நான்!
 
 

0 comments: