Thursday, June 26, 2008

உலகை வெல்வோம் !

மூச்சடக்க
முயலாவிட்டால்
முத்து உனக்கில்லை !
 
வாசலையே
தாண்டாவிட்டால் - நீ
வானம்
பார்க்கப் போவதில்லை !
 
ஒருநாள் மட்டுமே
வாழும் பூச்சிகள் கூட
ஓய்வெடுத்ததாய்
செய்திகள் இல்லை !
 
விடிய விடிய
மழை பெய்தாலும்
எறும்பு
பட்டினியாய்
படுத்ததில்லை !
 
முட்டி முட்டி
பால் குடிக்க
குட்டிகளுக்கு
சொல்லித்தந்தது
யாருமில்லை !
 
மூலையிலே
முடங்கிக்கிடந்தால்
முகட்டில் உனக்கு
இடமில்லை !
 
தொடமுடியா
உயரமென்று எதுவுமில்லை !
 
தொட்ட உயரமே
கடைசியில்லை !
 
எழுந்து வா . . .
 
உலகை வெல்வோம் !
 
 
உழவன்

3 comments:

தமிழ் said...

/ஒருநாள் மட்டுமே
வாழும் பூச்சிகள் கூட
ஓய்வெடுத்ததாய்
செய்திகள் இல்லை !

விடிய விடிய
மழை பெய்தாலும்
எறும்பு
பட்டினியாய்
படுத்ததில்லை !/

அருமையான வரிகள்

VIKNESHWARAN ADAKKALAM said...

சூப்பராக இருக்கிறது...

Thamizhan said...

சினிமாவே வாழ்க்கையென்று
சிதைந்து வரும் இளைஞரிலே
சிந்தித்துச் சிறப்பெய்த
சிலவரிகள் படைத்திட்டீர்!
சிந்தனைகள் உரமூட்ட
சிற்ப்புறுவர் தமிழரெல்லாம்!
செயல்வீரர் புகழடைவர்!