ஒருத்தரைப் புகழ்வதற்குக் கூட நேரம், காலம் இருக்கிறதா என்ன? கட்டாயம் இருக்கிறது என்கிறார் ஔவையார்.
நேசனைக் காணாவிடத்தில் நெஞ்சாரவே துதித்தல்
ஆசானை எவ்விடத்தும்
அப்படியே வாச மனையாளைப் பஞ்சனையில்
மைந்தர் தம்மை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில்! - ஔவையார்
விளக்கம் :
நண்பனைப் புகழ வேண்டுமானால் அவனைக் காணாதபோது மனமாரப் புகழ வேண்டுமாம்;
ஆசிரியர் என்றால் அவரை நேரிலும், மறைவிலும் எப்போதும் துதிக்கலாம்;
மனைவியைப் பஞ்சனையில் புகழ வேண்டுமாம்;
பெற்ற பிள்ளைகளைப் புகழ்வது மனதுக்குள் தானாம்;
வேலைக்காரர்களை, அவர்களது வேலைகளை முடித்த பிறகுதான் புகழவேண்டுமாம்.
Wednesday, April 23, 2008
ஒருத்தரைப் புகழ்வதற்குக் கூட நேரம், காலம் இருக்கிறதா? ஔவையார் பாடல் விளக்கம் தருகிறது.
Posted by "உழவன்" "Uzhavan" at 4/23/2008 07:51:00 AM
Labels: தமிழின் பெருமைகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment